மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நேற்று (05.08.2016) தாம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா ஜவாஹிருல்லாஹ் அவர்கள், இன்னும் ஒரு மாதத்தில் முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை வரவிருக்கிறது. அதில் முஸ்லிம்கள் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுப்பார்கள். இது அரசியல் அமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கிய உரிமை. எனவே இந்த உரிமையில் குழப்பம் விளைவிப்பவர்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் தடுக்க வேண்டி வரும் என்பதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அரசுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் சில இடங்களில் கோ ரக்ஸா தள் என்ற அமைப்பு பிரச்சினை செய்தனர். குறிப்பாக செங்கல்பட்டு டோல்கேட் அருகே மாடுகளை தடுத்து நிறுத்தினர். அப்போது அச்சிருப்பாக்கம் ஷாஜஹான் தலைமையில் தமுமுக சகோதரர்கள் களமிறங்கினார்கள். போராட்ட அறிவிப்பும் சாலை மறியல் அறிவிப்பு மூலமாக கடுமையான எச்சரிக்கை செய்தவுடன் காவல்துறை தலையிட்டு மாடுகளை மீட்டுக் கொடுத்ததுடன் கோ ரக்ஸா தள் அமைப்பினர் பிரச்சினையை பெரிதாக்க ஒரு மாட்டை சூழ்ச்சியாக கொன்றனர். அதற்கும் இழப்பீடு வாங்கியும் தந்தனர். மாநில அமைப்பு செயலாளர் யாக்கூப் வழிகாட்டுதலில் இப்பிரச்சினையை ஷாஜஹான் வீரியமாக்கியதால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
அதனால், அது போன்ற பிரச்சினைகள் இவ்வருடம் வரக்கூடாது என்ற காரணத்தினால் தான் பேரா. ஜவாஹிருல்லா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு தடுக்குமா? அல்லது வேடிக்கை பார்க்குமா என்பது அடுத்த மாதம் தெரியும்.